ஓபிஎஸ் செய்த தவறுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவை காப்பாற்ற அவர் தவறிவிட்டார். அதனால் அம்மாவின் ஆன்மா அவரை தற்போது வஞ்சிக்கிறது என கூறியுள்ளார்.