தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகள் இருக்கு வழங்கும் உரிமை தொகையை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசே நிறுத்திவிடும் என அண்ணாமலை பொய் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், தஞ்சாவூரில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று தரும் திமுக மாவட்ட செயலாளர் அவர்களுக்கு எனது செலவில் 6 பவுன் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.