ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் & மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ்(94) சித்தியடைந்தார். இவர் சிறு வயது முதலே ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மீது அளவு கடந்த பக்தியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள பேலூர் தபோவனத்தில் தன்னை பிரம்மச்சாரியாக இணைத்துக் கொண்டார். எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வந்த இவர் வயோதிகம் காரணமாக சித்தி அடைந்தார்.