தமிழகத்தில் கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள் தற்போது அதிகரித்து வருவதால் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கவும் பதிவு செய்வதற்கும் தனி இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுரம் மற்றும் அம்மை நோய் ஆகியவை மக்களிடம் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் இந்த நோய்களுக்காக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

மருத்துவமனைகளில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தொற்று அறிகுறி இருப்பவர்கள் https://ihip.mohfw.gov.in/#!/ என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பெயர், இடம், தொலைபேசி எண் மற்றும் நோய் தொற்று ஆகியவை குறித்து பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.