தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4107 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழி தேர்வை சுமார் 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.