‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து, பூமியிலிருந்து சுமார் 71.3 லட்சம் கி.மீ. தொலைவில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமி மீது மோத வாய்ப்பில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.