சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதே ஊரைச் சேர்ந்த அஞ்சம்மை என்பவரது மருமகன் சுதந்திர திருநாதன் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே சென்றது தெரியவந்துள்ளது. அவர் பொருட்கள் அனைத்தையும் மூட்டையாக கட்டி விட்டு மது அருந்தியதால் போதையில் வீட்டில் தூங்கியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.