விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரில் திருவள்ளுவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி சுபா கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இடத்தில் அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது.

இதனால் சுபாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுபாவின் குடும்பத்தினர் கடலூர் திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது