தென்காசி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருநங்கைகளிடம்  தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் தட்டி கேட்டனர். இதில் கோபமடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர்.

இதனையடுத்து போலீசார் பொதுமக்களின் உதவியுடன் இரண்டு பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் நெற்கட்டும் செவலை சேர்ந்த முத்துக்குமார், சுப்பையா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.