தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவில் நாகராஜ் -கற்பகம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.நேற்று கற்பகம் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி பேருந்து கற்பகம் மீது மோதியது.

இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கி கற்பகம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.