திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையம் நோக்கி புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கி விட்டனர்.

இந்த விபத்தால் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரயில்கள் தாமதமாக புறப்பட்டது. ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.