தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வேன்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர்கள் பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன், முரளிதரன், பிரபு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நீலகண்டன் , முரளிதரன், பிரபு ஆகிய 3  பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்