வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு முத்தரசிகுப்பம் ராஜா வீதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1  மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.