வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குடியாத்தம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் குடியாத்தம் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அந்த சிறுவன் இதுவரை 10 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.