தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். அந்த பெண் கிராம அலுவலக உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.

இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுm அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை பத்திரமாக மீட்டனர். சரியான நேரத்தில் மாற்றுதிறனாளி பெண்ணை மீட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.