தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஐயப்பன் பக்தர்களும், குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வரிசையில் காத்திருந்து குளித்து செல்கின்றனர்.