கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூர் கிராமத்தில் தனபாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட வேலைக்கு தனபாக்கியம் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் தனது சொந்தமான நிலத்தை பார்த்து வர சென்றுள்ளார். அந்த பகுதியில் இரவு நேரம் கன மழை பெய்ததால் மோட்டார் அறையின் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து கீழே கிடந்தது.

அதனை கவனிக்காமல் மிதித்ததால் தன பாக்கியம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனபாக்கியத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.