மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பால்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.