விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேல் வராதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார்,

நான் என் சகோதரர் இழந்ததை வேதனையாக கருதுகிறேன். வேறு எதையும் பற்றி நான் பேச விரும்பல. யாரு வராங்க, யாரு போறாங்க என இல்லை. என்னைப் பொருத்தவரை இன்று அவர் இல்லை. அந்த வேதனையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை மறப்பதற்கு பல நாட்கள் ஆகலாம்,  பல ஆண்டுகளாகலாம். அந்த வேதனையோடு நான் இங்கிருந்து செல்கிறேன்.

இந்த தருணத்தில் நான் எந்த டிமாண்டும் வைக்கல. என்னென்ன முடிவு எடுக்குறாங்க ? எப்படி சிறப்பு செய்ய வேண்டும் ? என்பதை நடிகர் சங்கம்  பகிர்ந்து கொள்ளும் போது என்னுடைய கருத்துகளை கூறுவேன்.  அவருடைய குடும்பத்தார் அவர்களை சந்திக்க இருக்கிறேன். திருமதி பிரேமலதா மற்றும் மகன்களை சந்திக்க இருக்கிறேன்.

அவர்கள் எண்ணங்கள் என்ன ? என்பதை தெரிந்து கொண்டு,  அவருடைய பெயரும்,  புகழும் சிறப்பாக இருப்பதற்கான முயற்சிகளில் நானும் பங்கு எடுப்பேன். வடிவேலுக்கு நீங்க சொன்ன பதில் தான் . வராதவர்களைப் பற்றி இங்கு பேசக்கூடிய தருணம் அல்ல. ஒரு நல்ல மனிதர் இறந்து இருக்கிறார். அந்த நல்ல மனிதரின் ஆசி  அவருகளுக்கும் கிடைக்கட்டும் என தெரிவித்தார்.