தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரது நடிப்பில் இப்போது சூர்யா-42 படம் உருவாகி வருகிறது. சூர்யா ஒரு பெரிய கடையில் வாட்ச்சை திருடி, தந்தையிடம் திட்டு வாங்கியது குறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிக்க வருவதற்கு முன்னதாக அமெரிக்காவில் கார்த்தி படித்துக் கொண்டிருந்தார். அப்போது தம்பியை பார்க்க குடும்பத்துடன் சூர்யா அமெரிக்கா சென்று உள்ளார்.

அங்கு சூர்யா வாட்ச் கடைக்கு சென்று உள்ளார். அப்போது விலையே பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா நைசாக ஒரு வாட்ச்சை எடுத்துக்கொண்டு யாரிடமும் சிக்காமல் கிளம்பி விட்டார். இதையடுத்து தான் வாட்ச்சை எடுத்து வந்தது குறித்து தம்பி கார்த்தியிடம் சூர்யா கூறியுள்ளார். பின் கார்த்தி நேராக அப்பா சிவகுமாரிடம் சென்று இதுகுறித்து கூறிவிட்டார்.

இதனால் கோபமடைந்த சிவகுமார் தன் மூத்த மகனுக்கு டோஸ் விட்டுள்ளார். தன் தந்தையிடம் திட்டு வாங்கிய சூர்யா, அடுத்தநாள் காலை அதே கடைக்கு சென்று யாருக்கும் தெரியாமல் அந்த வாட்ச்சை இருந்த இடத்திலேயே வைத்துள்ளார். இந்த வாட்ச் சம்பவத்தை சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.