தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என பட குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது புகழ்பெற்ற மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு சார் பட்டா பரம்பரை திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த விழா மாஸ்கோவில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததால் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.