தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா-42 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உள்ளிட்ட உரிமங்கள் ரூ.500 கோடிக்கு சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சூர்யா பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது “ஒரு நடிகராக சூர்யாவை எனக்கு பிடிக்காது.

அவரது நடிப்பில் ஓவர் ஆக்டிவ்வேட் இருக்கும் என்பதால் தனக்கு பிடிக்காது. எனினும் சூர்யா மிகவும் நல்ல மனிதர் ஆவார். 5 ஆயிரம் குழந்தைகளுக்கு படிப்பு கொடுத்து அவர்களை வாழ வைத்தவர் சூர்யா. பல்வேறு நடிகர்கள் தான் வாங்கும் சம்பளத்தை எங்கெங்கேயோ போய் கொட்டும் நிலையில், சூர்யா மட்டும்தான் அகரம் அறக்கட்டளை வாயிலாக குழந்தைகளை வாழ வைத்து வருகிறார். அவரை விமர்சிப்பது தவறு என தெரிவித்துள்ளார்.