நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதாவது,  விளை பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அவற்றை தடையின்றி ஏற்றுமதி செய்யவும், பற்றாக்குறை இருக்கும் காலத்தில் தேவையான உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் விவசாயிகள் லாபகரமான விலை கிடைக்காமல் போராடும் நிலைக்கு தள்ளப்படுவதால் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து வருகிறார்கள். எனவே மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு யாத்திரை மேற்கொண்டு, மார்ச் 21-ஆம் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்துடன் நிறைவு பெற உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.