தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று, சொட்டு நீர் பாசன குழாய், வேலி ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றது.

அந்த தோட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் குடியிருப்பு பகுதி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.