சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவா தனது நண்பர்களுடன் செக்கானூர் பேரேஜ் அருகே இருக்கும் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஜீவா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஜீவாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.