கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பரான ஷிபு என்பவருடன் அழகிய மண்டபத்தில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் வெள்ளியோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நண்பர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிதின், ஷிபு ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நிதினை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சிபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.