கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அம்மன் நகரில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கலையரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை கலையரசன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதனையடுத்து மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி பல்வேறு தவணைகளாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கலையரசனுக்கு எந்த தகவலும் வரவில்லை. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கலையரசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.