தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொரவடஅள்ளியில் சரசு என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு செவ்வந்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வந்தி அபிஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 8- ஆம் தேதி வீட்டில் சமையல் செய்யாமல் இருந்தது குறித்து அபிஷேக் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து அபிஷேக் சொந்த ஊரான ஜி.பாளையத்திற்கு சென்ற பிறகு மன உளைச்சலில் இருந்த செவ்வந்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செவ்வந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.