ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் துதிவாலா கிஷன்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கார்த்திகேய சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு குரு கிராமுக்கு எம்பி கார்த்திகேய சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த டிரக் ஒன்று காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எம்பி கார்த்திகேய சர்மா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்பியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.