விஜயகாந்த்தை  பொருத்தவரை ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் கூட  அனைவரது மனங்களையும் கவர்ந்தவராக இருக்கின்றார்.  திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சியில் இருக்கக்கூடியவர்களும் கூட விஜயகாந்த் அவர்களை நேசிக்கக்கூடிய தலைவராக  இருக்கின்றார். காரணம் அவர் திரைப்படத்தில் நடித்தார் என்பது மட்டுமல்லாமல்,  அவர் ஏழைகளுக்கு அதிகமாக அள்ளிக் கொடுக்கக்கூடிய குணம் படைத்தவர் என்று அவருடன் நடித்த பல நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகர்கள் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

அவற்றைப் பார்க்கும்போது நல்ல மனிதர் இவருக்கு இப்படி உடல்நல குறைவு ஆகி விட்டது என்று பலரும் சமூகவலைதளங்களை கருத்து  தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையிலே விஜயகாந்த் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமே ஒரு அதிர்ச்சியான தகவலாக இருக்கின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கின்றது.  எனவே அதற்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம்.  அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை தரப்பிலே தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

விஜயகாந்த் அவர்களை பொறுத்தவரையிலே அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு தான் சென்று பார்ப்பது வழக்கம். இரண்டு முறை வெளிநாடுகளுக்கும் சென்று உயர்தர சிகிச்சை அங்கே கொடுக்கப்பட்டு,  அதன் பிறகு அவர் வந்திருக்கின்றார். தொடர்ச்சியாக அவர் பேசுவதற்கும்,  நடப்பதற்கும் பயிற்சிகள் கூட தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த நிலையிலே அவருக்கு திடீரென்று காய்ச்சல்,

சளி போன்றவை ஏற்பட்ட காரணத்தினால் அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருடைய உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கின்றது. விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்தோடு மீண்டு வர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களினுடைய எண்ணமாக இருக்கின்றது.