திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி இருக்கும் வி.கேபுரம், கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து தண்ணீர் மிதமாக வருகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.