சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே கோவில்பட்டி குடியிருப்பு பகுதி முற்பகலில் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றத தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.