திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவனந்தல் சந்தை மேட்டில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கலசபாக்கத்தில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து விடுகிறார். நேற்று முன்தினம் ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிஹரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.