கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் நான்காம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் டிசம்பர் நான்காம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.