கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரியாவிளை வட்டக்கோடு பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெயராஜ் உடையார்விளை பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயராஜ் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 21-ஆம் தேதி ஜெயராஜ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.