தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அன்னை இந்திரா நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டாவது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் முத்து மன உளைச்சலில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.

சம்பவம் நடைபெற்ற அன்று முத்து தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.