தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பட்ட முடையார் புரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பொருளை பொருட்களை விற்பனை சேர்ந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பொன் பாண்டி, தங்கராசு ஆகியோரின் கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பொன் பாண்டி, தங்கராசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.