தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்து ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விக்கி என்பது தெரியவந்தது.

மேலும் விக்கி  காரில் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்கியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.