மதுரை மாவட்டம் முழுவதும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் 9 குழுக்களாக நகர் பகுதிகளிலும்,  10 குழுக்களாக புறநகர் பகுதிகளிலும் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதனையடுத்து 16 கடைகளுக்கும் 1  லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இனி குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.