கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவம்பட்டி கிராமத்தில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் எனது மகள் சந்தியாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயதில் மகனும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

கடந்த 24-ஆம் தேதி நான் பூங்காவனத்தை அம்மன் கோவில் திருவிழாவுக்கு பேரக்குழந்தையுடன் சென்றிருந்தேன். திருவிழா முடிந்து 25-ஆம் தேதி மாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து எனது மகள் மற்றும் பேர குழந்தைகளை தர்மபுரி செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இரவு ஆகியும் எனது மகள் வீட்டிற்கு செல்லவில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தோம். ஆனாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

நான் விசாரித்ததில் எனது மகள் சந்தியா வாசுதேவன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் அவருடன் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.