அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும். மருந்து, உணவு, வேளாண் இடுபொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். வனங்களை அளிக்கும் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் மகேந்திரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் தண்டபாணி, சிஐடியு செயலர் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் தலைமை வகிக்க சங்க நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.