ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more