ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.