திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஏபி நகர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இதில் 12 வயது மூத்த மகளுக்கு கூலி தொழிலாளி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய போது அவர் தனது கணவனை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த மகளை கூலி தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் மயங்கிய சிறுமியை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தத் தாய் காவல் நிலையத்தில் கணவன் மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கூலி தொழிலாளியை கைது செய்தனர்.