தமிழகத்திற்கு டிசம்பர் இரண்டு,  மூன்று ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாக வானிலை ஆய்வு  தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியிருந்தார். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் ஆனது விடுக்கப்பட்டிருக்கிறது