தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் 30 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண் மற்றும் சிறுமியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அந்த பெண் இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.