தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். அங்கு சாரல் மழை பெய்து மிதமான வெயில் அடித்ததால் மகிழ்ச்சியுடன் சுற்றுலாப் பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். நாளை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.