திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் அடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி- குருமா வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட ஏழு மாணவர்களுக்கு தலைசுற்றல் , வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் மாணவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து அறிந்த திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள் பள்ளி விடுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது விடுதியில் இருக்கும் உணவு கூடம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததும், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல் செயல்பட்டதும் தெரியவந்தது. அந்த பள்ளி உணவகம் மீது போலீசார் வழக்குபதிந்து, உணவு தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதி உணவு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.