கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் சதீஷ்குமார் கூறியபடி சிறுமி உளுந்தூர்பேட்டைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டைக்கு சென்று தங்களது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து செல்போன் மூலம் சிறுமியை தொடர்பு கொண்ட சதீஷ்குமார் தொடர்ந்து அவருக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் எனக்கு 70 ஆயிரம் ரூபாய் தரவில்லை என்றால் என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.