தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சரவண பொய்கை தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் திவ்யா ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் கீழமாஞ்சேரியை சேர்ந்த சோபனா என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக திவ்யாவும், சோபனாவும் ஸ்கூட்டரில் சென்றனர்.

இவர்கள் வலையப்பேட்டை பகுதியில் சென்றபோது பலத்த காற்று வீசியதால் ஒரு மரம் முறிந்து திவ்யா ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதனால் பலகாரமடைந்த திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோபனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.