ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன் புல்லட் பைக்கில் அமர்ந்திருக்கும் வகையில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.